இந்திய ரயில்வேயன் ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியத்தின் சார்பில் (RRB) கிழக்கு மத்திய இரயில்வே துறையில் (ECR) காலியாக உள்ள அப்ரண்டிஸ் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 3366 அப்ரண்டிஸ் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இதற்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாகம் : கிழக்கு மத்திய இரயில்வே (ECR, Railway)
மேலாண்மை : இந்திய ரயில்வேயன் ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB)
பணி : Apprentice
மொத்த காலிப் பணியிடம் : 3366
காலிப் பணியிடம் மற்றும் பணியிடங்கள்:
- Howrah Division - 659
- Sealdah Division - 1123
- Asansol Division - 412
- Malda Division - 100
- Kanchrapara Workshop - 190
- Liluah Workshop - 204
- Jamalpur Workshop - 678
கல்வித் தகுதி :
- 10ம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- மேலும், அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் பணிக்கு தொடர்புடைய பாடங்களில் ஐடிஐ தேர்ச்சி அல்லது NCVT, SCVT சான்றிதழ் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு : விண்ணப்பதாரர் 15 முதல் 24 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு :
https://139.99.53.236:8443/rrcer/NOTIFICATION%20ACT%20APPRENTICE%202020-21.pdf
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://139.99.53.236:8443/rrcer/notice_board.html எனும் இணையதளத்தின் மூலம் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 04.10.2021 அன்று முதல் 03.11.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம் :
- பொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் - ரூ.100
- மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் (எஸ்.டி. / எஸ்.சி./ பி.டபிள்யு.டி) விண்ணப்பக் கட்டணம் கிடையாது.
தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் ஐடிஐ மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.ecr.indianrailways.gov.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.