திண்டுக்கல் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பல்வேறு பள்ளிகளில் இப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ள நிலையில் இதற்கு 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாகம் : திண்டுக்கல் அரசு உதவி பெறும் பள்ளி
பணி : அலுவலக உதவியாளர்
பணியிடம் : திண்டுக்கல்
கல்வித் தகுதி : 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
ஊதியம் : ரூ.4,800 முதல் ரூ.10,000 மாதம்
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் 30.06.2021 தேதிக்குள் நிர்வாகி, நாகம்மாள் நினைவு உயர்நிலைப்பள்ளி, தண்டிகுடி, திண்டுக்கல் -6424216 என்ற முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.
தேர்வு முறை : விண்ணப்பதாரர் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் நாகம்மாள் நினைவு உயர்நிலைப் பள்ளியை அனுகவும்.