திண்டுக்கல் மாவட்டத்தில் கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் கீழ் செயல்பட்டு வரும் திண்டுக்கல் மத்திய கூட்டுறவு வங்கியில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் மற்றும், ஓட்டுநர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 32 பணியிடங்கள் தற்போது நிரப்பப்பட உள்ளது. இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : மத்திய கூட்டுறவு வங்கி, திண்டுக்கல்
மேலாண்மை : தமிழக அரசு
மொத்த காலிப்பணியிடம் : 32
பணி மற்றும் காலிப் பணியிட விபரம்:
- அலுவலக உதவியாளர் - 26
- ஓட்டுநர் - 06
கல்வித் தகுதி : 8-வது தேர்ச்சி பெற்றவர்கள், ஓட்டுநர் உரிமம் பெற்றவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு : மேற்கண்ட பணியிடத்திற்கு 30 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு அரசு விதிமுறைப்படி வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
ஊதியம் :
அலுவலக உதவியாளர் : ரூ.10,500 முதல் ரூ.31,650 வரையில்
ஓட்டுநர் : ரூ.11,250 முதல் ரூ.33,075 வரையில்
விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் https://www.dglccb.com என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அதனைப் பூர்த்தி செய்து விண்ணப்பப் படிவத்தில் உள்ள முகவரிக்கு 07.02.2020 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.
தேர்வு முறை : குறுகிய பட்டியல் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.dglccb.com என்னும் அதிகாரப்பூர்வ லிங்க்கை காணவும்.


Click it and Unblock the Notifications












