தருமபுரி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் காலியாக உள்ள உதவியாளர் மற்றும் கணினி இயக்குபவர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 10-வது தேர்ச்சியடைந்தவர்கள், கணினி இயக்கத் தெரிந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : தருமபுரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலகம்
பணி : உதவியாளர், கணினி இயக்குபவர்
பணி முறை : ஒரு வருட ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்யப்படுகிறது.
(இருப்பினும் அடுத்தடுத்து வரக்கூடிய வேலைவாய்ப்புகளில் இந்த பணி அனுபவம், விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை அளிக்கக்கூடும்.) எனவே, அரசு வேலைக்கு தயாராகிக் கொண்டிருப்பவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
கல்வித் தகுதி : விண்ணப்பதாரர் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், DCA எனப்படும் கணினி பயன்பாட்டு கல்வியில் டிப்ளமோ படித்திருக்க வேண்டும்.
கணினி இயக்குபவர் பணிக்கு குறைந்தது ஒரு வருடம் பணி அனுபவம் தேவை.
வயது வரம்பு : 40 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
ஊதியம் : மாதம் ரூ.10,000
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியில் சேர தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பப்படிவம் தயாரித்து, அதனைப் பூர்த்தி செய்து, நவம்பர் 27 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பங்கள் அஞ்சல் வழியாக மட்டுமே அனுப்ப வேண்டும்.
விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:-
மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர்,
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம்,
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்,
தருமபுரி.
இப்பணியிடங்களுக்காக அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications












