தில்லி மேம்பாட்டு ஆணையத்தில் காலியாக உள்ள உதவி பொறியாளர் பணியிடத்தினை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கேட் தேர்வில் பெறும் மதிப்பெண் அடிப்படையில் இப்பணியிடத்திற்கு ஆட்பள் தேர்வு செய்யப்பட உள்ளனர். தகுதியும், விருப்பமும் உடையவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாகம் : தில்லி மேம்பாட்டு ஆணையம்
மேலாண்மை : மத்திய அரசு
பணி : உதவி பொறியாளர் (சிவில்)
மொத்த காலிப் பணியிடங்கள் : 11
பணி : உதவிப் பொறியாளர் (இஇஇ, மெக்கானிக்கல்)
காலியிடங்கள் : 03
வயதுவரம்பு : 21 முதல் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி : பொறியியல் துறையில் சிவில், இஇஇ, மெக்கானிக்கல் பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை :
- கேட் 2019 தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
- எனவே, கேட் -2019 தேர்வில் விண்ணப்பித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.
விண்ணப்பிக்கும் முறை : www.dda.org.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 2019 பிப்ரவரி 15ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறிய www.dda.org.in என்னும் இணையதள முகவரியினை கிளிக் செய்யவும்.