மத்திய தொழில் பாதுகாப்பு படையில் காலியாக உள்ள தலைமைக் காவலர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 300 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இப்பணியிடங்களுக்கு விளையாட்டு வீரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாகம் : மத்திய தொழில் பாதுகாப்பு படை
மேலாண்மை : மத்திய அரசு
பதவி : தலைமைக் காவலர் (பொது)
மொத்த காலிப் பணியிடங்கள் : 300
காலியிடங்கள் உள்ள விளையாட்டுத்துறை:-
தடகளம், குத்துச்சண்டை, கூடைப்பந்து, ஜிம்னாஸ்டிக்ஸ், ஹேண்ட் பால், கால்பந்து, ஹாக்கி, கபடி, ஜூடோ, நீச்சல், துப்பாக்கிச் சுடுதல், வாலிபால், பளுதூக்குதல், மல்யுத்தம், டேக்வாண்டோ ஆகிய 15 பிரிவுகளை சேர்ந்த வீரர்களுக்கு காலியிடங்கள் உள்ளன.
கல்வித் தகுதி : 12ம் வகுப்பு தேர்ச்சியுடன் கல்வி நிறுவனங்கள் சார்பில் மாநில, தேசிய, சர்வதேச விளையாட்டு போட்டிகளில் பங்கேற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு : 01.08.2019 தேதியின்படி 18 முதல் 23 வயதிற்கு உட்பட்டிருக்க வேண்டும். 02.08.1996 முதல் 01.08.2001 ஆம் தேதிக்குள் பிறந்திருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.
ஊதியம் : மாதம் ரூ.25,500 முதல் ரூ.81,100 வரையில், மேலும் கூடுதல் படிகள் வழங்கப்படும்.
உடற் தகுதி : ஆண்கள் குறைந்தபட்சம் 167 செ.மீ உயரமும், பெண்கள் 153 செ.மீட்டர் உயரும் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு முறை : சம்மந்தப்பட்ட விளையாட்டு பிரிவில் திறமை, எழுத்துத் தேர்வு, மருத்துவத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை : http://www.davp.nic.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள விண்ணப்பப் படிவத்தினைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை குறிப்பிட்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும். (விளையாட்டு பிரிவு வாரியாக அனுப்ப வேண்டிய முகவரி மாறுபடுகிறது.)
விண்ணப்பக் கட்டணம் :
- பொது மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு ரூ.100.
- பெண்கள் மற்றும் எஸ்சி, எஸ்டி பிரிவினர் கட்டணம் செலுத்தத் தேவையில்லை.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 17.12.2019
இப்பணியிடங்கள் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://www.davp.nic.in/WriteReadData/ADS/eng_19113_4_1920b.pdf என்னும் லிங்கை கிளிக் செய்யவும்.