மத்திய அரசிற்கு உட்பட்ட வட கிழக்கு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் காலியாக உள்ள திட்ட அலுவலர் மற்றும் இணை ஆராய்ச்சியாளர் பணியிடத்தினை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்கு எம்.எஸ்சி, பி.எச்டி முடித்தவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். மத்திய அரசின் கீழ் இப்பணியில் சேர தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாகம் : வட கிழக்கு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம்
மேலாண்மை : மத்திய அரசு
மொத்த காலிப் பணியிடம் : 06
பணி மற்றும் பணியிட விபரம்:-
- திட்ட அலுவலர் : 05
- இணை ஆராய்ச்சியாளர் : 01
கல்வித் தகுதி :
- திட்ட அலுவலர் : எம்.எஸ்சி வேதியியல்
- இணை ஆராய்ச்சியாளர் : பி.எச்டி
வயது வரம்பு : 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் :
- திட்ட அலுவலர் : ரூ.25,000 மாதம்
- இணை ஆராய்ச்சியாளர் : ரூ.28,000 மாதம்
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.rrljorhat.res.in என்ற இணையதளத்தில் உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் 15.02.2019 அன்று காலை 09.30 மணி முதல் நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் : Conference Room, 1st Floor Administrative Bldg, CSIR-NEIST, Jorhat, Assam.
தேர்வு முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறிய www.rrljorhat.res.in அல்லது http://www.rrljorhat.res.in/jobs/Advt-17-2018-HRD.pdf?fbclid=IwAR1xiozG_Rfo0bNWJhAGwPv5NdQLYQuXmQQIIzdo7Vp8Xqr4Uifcm8MOR20 என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.