மத்திய பாதுகாப்புப் படையில் (CRPF) காலியாக உள்ள தலைமை ஆசிரியர், ஆசிரியர் மற்றும் ஆயுஸ் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 9 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு 5-வது தேர்ச்சி பெற்றவர்கள், பி.எட் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : மத்திய பாதுகாப்புப் படை (Central Reserve Police Force- CRPF)
மேலாண்மை : மத்திய அரசு
பணி : Headmistress, Teachers மற்றும் Ayah
மொத்த காலிப் பணியிடங்கள் : 09
கல்வித் தகுதி :
தலைமை ஆசிரியர் - பி.எட் தேர்ச்சி பெற்று 2 முதல் 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
ஆசிரியர் - பி.எட் தேர்ச்சி பெற்று பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டும்.
Ayah - 5-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது.
வயது வரம்பு:
Headmistress - 30 முதல் 40 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
Teachers - 21 முதல் 40 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
Ayah - 18 முதல் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் : ரூ.6,500 முதல் ரூ.10,000 மாதம்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் [email protected] எனும் மின்னஞ்சல் முகவரிக்கு தங்களது விண்ணப்பப் படிவம் கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் - 19.06.2021
நேர்காணல் நடைபெறும் தேதி - 25.06.2021
நேர்காணல் நடைபெறும் நேரம் - காலை 10.00 மணி முதல்
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://crpf.gov.in/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












