மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் மத்திய பெருந்தோட்ட பயிர்கள் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள களப் பணியாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 2 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ஐடிஐ துறையில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாகம் : மத்திய பெருந்தோட்ட பயிர்கள் ஆராய்ச்சி நிறுவனம்
மேலாண்மை : மத்திய அரசு
பணி : களப் பணியாளர்
மொத்த காலிப் பணியிடம் : 02
கல்வித் தகுதி : ஐடிஐ தேர்ச்சி பெற்றவர்கள் மேற்குறிப்பிட்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு : ஆண் விண்ணப்பதாரர் 30 வயதிற்கு உட்பட்டும், பெண் விண்ணப்பதாரர் 35 வயதிற்கு உட்பட்டும் இருக்க வேண்டும்.
ஊதியம் : ரூ.15,000
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.cpcri.gov.in என்ற இணையதளத்தில் உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் 26.06.2020 அன்று காலை 09.00 மணி முதல் நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் : ICAR-CPCRI, Kudlu PO, Kasaragod, Kerala - 671 124
தேர்வு முறை : நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.cpcri.gov.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.