சென்னை பெட்ரோலியம் நிறுவனத்தில் (CPCL) பல்வேறு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பொதுத்துறை நிறுவனமான சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேசன் லிமிடேட் நிறுவனத்தில் பணியாற்ற தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஊதியம், தகுதி, எவ்வாறு விண்ணப்பிக்க வேண்டும் உள்ளிட்ட தகவல்களை காணலாம்.
தேர்வு செய்யப்படும் முறை:-
மூன்று கட்டங்களாக தேர்வுகள் நடைபெறும். அவை
- எழுத்துத் தேர்வு
- நேர்முகத் தேர்வு
- உடற்தகுதித் தேர்வு
காலிப் பணியிடங்கள் : பொறியாளர், ஐடி&எஸ் அலுவலர், மனதவள மேம்பாட்டு அலுவலர் மற்றும் பாதுகாப்பு அலுவலர்
நிறுவனம் : சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேசன் லிமிடேட்
கல்வித் தகுதி : பொறியியல் துறையில் முதல்தரவரிசையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தொழில்நுட்பப் பிரிவில் சான்றிதர் பெற்றிரக்க வேண்டும்.
முன்அனுபவம் : தேவையில்லை
தனித் திறன் : தொழில்நுட்பத் திறன் பெற்றவராக இருக்க வேண்டும்.
வயது வரம்பு : 26 வயதிற்கு உட்பட்டவராக இருத்தல் அவசியம்.
பணியிடம் : சென்னை
ஊதியம் : ரூ. 60000 முதல் ரூ. 180000 வரை
விண்ணப்பம் வரவேற்கப்படும் நாள் : 2018 செப்டம்பர் 18 முதல்
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 2018 அக்டோபர் 8
விண்ணப்பிக்கும் முறைகள்:-
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் முறைகள் ஒன்றன் பின் ஒன்றாக இங்கே காண்பிக்கப்பட்டுள்ளது.
வழி 1:-
CPCL-யின் அதிகாரப் பூர்வ இணையதளத்தில் உள்நுழைய வேண்டும்.
வழி 2:-
திறக்கப்பட்ட சிபிசிஎல் பக்கத்தின் மேலே உள்ள People & Careers பக்கத்தை கிளிக் செய்ய வேண்டும்.
வழி 3:-
அதில், Recruitment Drive பக்கத்தினை தேர்வு செய்ய வேண்டும்.
வழி 4:-
அப்பக்கத்தில் வேலைவாய்ப்பிற்கான அறிவிப்புகள் காண்பிக்கப்படும்.
வழி 5:-
அவற்றில் Recruitment of Officers பக்கத்தினை தேர்வு செய்தால் உங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வரும்.
வழி 6:-
அவற்றில் வேலை வாய்ப்பிற்கான முழுத் தகவல்களும் குறிப்பிடப்பட்டிருக்கும். விண்ணப்பம் செப்டம்பர் 24ம் தேதியன்று வெளியிடப்படும். மேலும் விபரங்களுக்கு https://www.cpcl.co.in/People&Careers/RecruitmentDrive/2018/Officers' Recruitment 2018.pdf இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்.