தமிழ்நாடு அரசு மாற்றுத் திறனாளிகள் நல ஆணையத்தில் காலியாக உள்ள தட்டச்சர், உதவியாளர், அக்கவுண்டர் உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 54 பணியிடங்கள் உள்ள நிலையில் இதற்கு ரூ.1.50 லட்சம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாகம் : தமிழக அரசு மாற்றுத் திறனாளிகள் நல ஆணையம்
மேலாண்மை : தமிழக அரசு
பணி : Data Entry Operator, Typist, Assistant, Accountant, Program Officer, Program Manager மற்றும் பல பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
மொத்த காலிப் பணியிடம் : 54
கல்வித் தகுதி :
அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் 10-ஆம் வகுப்பு 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், டிப்ளமோ, பி.இ, பி.டெக், எம்.எஸ்சி, எம்பிஏ, முதுநிலைப் பட்டம், மாஸ்டர் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
முன் அனுபவம் : விண்ணப்பதாரர்கள் 2 ஆண்டுகல் முதல் 7 ஆண்டுகள் வரையில் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
ஊதியம் : ரூ.10,000 முதல் ரூ.1,50,000 மாதம்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை :
மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் 27.12.2021 தேதிக்குள் அதிகாரப்பூர்வ அறிவிப்புடன் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தினைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 27.12.2021 தேதிக்குள் விண்ணப்பம் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.
தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்காணல் மற்றும் எழுத்துத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.scd.tn.gov.in அல்லது மேலே குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை காணவும்.