மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் சிஓஐஆர் போர்டு (Coir Board) எனும் ஆணையத்தில் காலியாக உள்ள மேலாளர், உதவியாளர், தட்டச்சர், கிளார்க் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 36 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.1.77 லட்சம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாகம் : Coir Board
மேலாண்மை : மத்திய அரசு
பணி : Senior Scientific Officer, Scientific Assistant, Showroom Manager, Assistant, Upper Division Clerk, Junior Stenographer, Mechanic, Hindi Typist, Lower Division Clerk, Salesman, Training Assistant மற்றும் Machine Operator ஆகிய பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
மொத்த காலிப் பணியிடங்கள் : 36
வயது வரம்பு :
விண்ணப்பதாரர் 25 முதல் 40 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி :
அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி, ஐடிஐ அல்லது, சம்பந்தப்பட்ட துறையில் பட்டம், பொறியியல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மேற்கண்ட பணியிடத்திற்கு முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
ஊதியம் : ரூ.19,900 முதல் அதிகபட்சம் ரூ.1,77,500 மாதம்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் http://coirboard.gov.in எனும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் 15.08.2021 தேதிக்குள் ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 15.08.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். (இன்றே கடைசி நாள்)
தேர்வு முறை : விண்ணப்பதாரர் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம் :
- SSO பணிகள் - ரூ.500
- Scientific Assistant, Showroom Manager மற்றும் Assistant - ரூ.400
- மற்ற பணிகளுக்கு - ரூ.300
- எஸ்.சி, எஸ்டி, பிற்படுத்தப்பட்டவர், முன்னாள் இராணுவத்தினருக்கு கட்டணம் கிடையாது
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://coirboard.gov.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.