கோயம்புத்தூர் மாவட்டம், சிங்காநல்லூர் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் இ.எஸ்.ஐ மருத்துவமனையில், காலியாக உள்ள தர மேலாளர் பணியிடங்களுக்கு நாளை விண்ணப்பிக்க கடைசி நாளாகும்.
நிர்வாகம் : தேசிய நலவாழ்வு குழுமம்
மேலாண்மை : மாநில அரசு

பணி விவரம்
Ø மருத்துவமனை பணியாளர் (health Worker/ Support Staff)
விண்ணப்பிக்க கடைசி தேதி - 29.05.2023
நோட் இட் ப்ளீஸ்...!
விண்ணப்பங்கள் தொடங்கிய தேதி : 17-05-2023
விண்ணப்பிக்க கடைசி தேதி : 29-05-2023
பணியிடங்கள் எண்ணிக்கை: 26
ஊதியம்
Ø மருத்துவமனை பணியாளர் -ரூ.8,500 (தொகுப்பூதியம்)
கல்வித்தகுதி
மருத்துவமனை பணியாளர் பணிக்கு குறைந்தபட்சம் எட்டாம் வகுப்பு படித்திருக்க வேண்டும். எழுத படித்திருக்கவும் தெரிந்திருப்பது அவசியம்.
நோட் இட் ப்ளீஸ்...!
தகுதியான நபர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் கொடுக்கப்பட்ட விண்ணப்பங்கள் மாதிரியை பதிவிறக்கம் செய்து, அவற்றை பூர்த்தி செய்து, பணிக்கு தேவையான கோரப்பட்ட அனைத்து சான்றிதழ்களின் நகல்களில் சுய ஒப்பமிட்டு இணைத்து 29.05.2023 அன்று மாலை 5.00 மணிக்குள் அனுப்ப வேண்டும்.
பணிக்கு விண்ணப்பிக்க வயது வரம்பு அரசு விதிகளுக்கு உட்பட்டது. இருப்பினும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
விண்ணப்பப்படிவத்தைப் பூர்த்தி செய்து அஞ்சல் மூலம் அனுப்பவது அல்லது அலுவலகத்திற்கு சென்று நேரடியாக விண்ணப்பிக்கலாம். இப்பதவி முற்றிலும் தற்காலிகமானது.
எந்தவொரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்படமாட்டாது.
காலிப் பணியிட விவரம் மாறுதலுக்குட்பட்டது.
விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி
நிர்வாக செயலாளர்/துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள்,
மாவட்ட நலவாழ்வு சங்கம்(District Health Society),
219, ரேஸ் கோர்ஸ் ரோடு,
கோயம்புத்தூர் மாவட்டம்,
தொலைபேசி எண்: 0422-2220351.
என்ற முகவரியில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ விண்ணப்பங்களை அளிக்கலாம்.
Ø திரும்பவும் நினைவுப்படுத்துகிறோம் பணிகள் முற்றிலும் தற்காலிகமானது.
Ø எந்தவொரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்படமாட்டாது.
கடைசி தேதிக்கு பின் வரப்பெறும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படாது. பணி சார்ந்த கூடுதல் விபரங்களுக்கு, அலுவலக நாட்களில் நேரில் சென்று அறிந்து கொள்ளலாம். ஒரு வாரம் தான் இருக்கு, இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் என்பதை நினைவில் கொள்ளவும்.


Click it and Unblock the Notifications












