மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் தொழில் பாதுகாப்புப் படையில் (CISF) காலியாக உள்ள தலைமைக் காவலர், எஸ்.ஐ, உதவி எஸ்.ஐ உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 2000 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.40 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்க்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையுங்கள்.

நிர்வாகம் : மத்திய தொழில் பாதுகாப்புப் படை (CISF)
மேலாண்மை : மத்திய அரசு
மொத்த காலிப் பணியிடம் : 2,000
பணி மற்றும் காலிப் பணியிட விபரங்கள்:
- SI/Exe - 63
- ASI/Exe. - 187
- HC/GD - 424
- Constable/GD - 1326
கல்வித் தகுதி : ஒவ்வொரு பணியிடங்களுக்கும் தனித் தனியே கல்வித் தகுதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காணவும்.
வயது வரம்பு :
- விண்ணப்பதாரர் 50 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
- அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
ஊதியம்:
- SI/Exe. - ரூ.40,000 மாதம்
- ASI/Exe. - ரூ.35000 மாதம்
- HC/GD - ரூ.30,000 மாதம்
- Constable/GD - ரூ.25,000 மாதம்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தினைப் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் சான்றிதழ் சரிபார்ப்பு, உடற் தகுதித் திறன், மருத்துவ பரிசோதனை போன்றவற்றின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.cisf.gov.in/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












