மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் தொழில் பாதுகாப்புப் படையில் காலியாக உள்ள சமையலர், கார்பெண்டர், சுகாதாரப் பணியாளர், பிளம்பர், பெயின்டர் உள்ளிட்ட 900 க்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு 10-வது தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்க்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையுங்கள்.
நிர்வாகம் : மத்திய தொழில் பாதுகாப்புப் படை
மேலாண்மை : மத்திய அரசு
மொத்த காலிப் பணியிடம் : 911
(முன்னாள் இராணுவத்தினர்களுக்கு 90 பணியிடம் தனியே ஒதுக்கப்பட்டுள்ளது.)
பணி முறை : தற்காலிகமான பணிகள்
பணிகள் மற்றும் காலிப் பணியிட விபரங்கள்:-
- சமையலர் - 350
- காப்லர் - 13
- பார்பர் - 109
- வாஷர் மேன் - 133
- கார்பெண்டர் - 14
- ஸ்வீப்பர் - 270
- பெயிண்டர் - 6
- மேசன் - 5
- பிளம்பர் - 4
- மாலி - 4
- எலெக்ட்ரிசீயன் - 3
மொத்தம் : 911. இது தவிர முன்னாள் ராணுவத்தினர்களுக்கு 90 இடங்கள் தனியாக ஒதுக்கப்பட்டுள்ளது.
கல்வித் தகுதி : 10ம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையான கல்வித் தகுதி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
- 1 ஆகஸ்ட் 2019 தேதியின்படி, விண்ணப்பதாரர்கள் 18 முதல் 23 வயதுக்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
- குறிப்பிட்ட பிரிவினர்களுக்கு அரசு விதிமுறைப்படி வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
ஊதியம் : ரூ.21,700 முதல் ரூ.69,100 வரையில்
தேர்வு முறை :
உடற்திறன், உடற்தகுதித் தேர்வு, எழுத்துத்தேர்வு, மருத்துவ பரிசோதனை, சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்:-
பொது மற்றும் ஓபிசி, பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களுக்கு விண்ணப்பக்கட்டணம் ரூ.100
எஸ்சி, மற்றும் எஸ்.டி, முன்னாள் ராணுவத்தினர்களுக்கு விண்ணப்பக்கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
இப்பணியிடத்தில் சேர தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.cisf.gov.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தினைக் காணவும்.