மத்திய அரசுத் துறையின் மீன் வள நிறுவனத்தில் காலியாக உள்ள இளநிலை தொழில் அலுவலர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எம்.எஸ்சி, பி.எஸ்சி பட்டதாரிகள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள். இப்பணியிடத்திற்கு ஊக்கத் தொகையாக மாதம் ரூ.15 ஆயிரம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்க்காணும் தேதியில் நடைபெறும் நேர்முகத் தேர்வில் பங்கேற்றுப் பயனடையலாம்.

நிர்வாகம் : மத்திய மீன் வள நிறுவனம்
மேலாண்மை : மத்திய அரசு
பணி : இளநிலை தொழில் அலுவலர்
மொத்த காலிப் பணியிடம் : 02
கல்வித் தகுதி : எம்.எஸ்சி வேதியியல், பி.எஸ்சி உணவு அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
வயது வரம்பு : 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.cift.res.in என்ற இணையதளத்தில் உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் 23.09.2019 அன்று காலை 10.00 மணி முதல் நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் : Willingdon Island Matsyapuri, Kochi, Kerala.
தேர்வு முறை : நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர் தேர்வு செய்யப்படுவார்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறிய விரும்புவோர் www.cift.res.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதள மக்கத்தினைக் காணவும்.


Click it and Unblock the Notifications












