புழல் மத்திய சிறைச்சாலையில் காலியாக உள்ள சமையலர் மற்றும் ஆற்றுப்படுத்துநர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ரூ.50 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடத்திற்கு 8-வது தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்க்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
பணியிடம் : புழல் மத்திய சிறைச்சாலை, சென்னை
பணி :
- சமையலர் - 01
- ஆற்றுப்படுத்துநர் - 01
கல்வித் தகுதி :
சமையலர்
எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம். சமையல் பணிக்கு விண்ணப்பிப்போர் குறைந்தது இரண்டு ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
ஆற்றுப்படுத்துநர் (Counsellor)
Sociology/Psychology/Social Work போன்ற துறைகளில் முதுநிலைப் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு :
(அதிகப்பட்சமாக) எஸ்.சி./எஸ்.சி.ஏ-35, எஸ்.டி- 35, பிற்படுத்தப்பட்டோர் -32, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் - 32, ஓ.சி-30 இருத்தல் வேண்டும்.
ஊதியம் : ரூ.15,900 முதல் ரூ.50,400 மாதம்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு :
விண்ணப்பிக்கும் முறை : தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பப் படிவத்தினைப் பூர்த்தி செய்து 28.01.2021ஆம் தேதிக்குள் சிறைக்கண்காணிப்பாளர், மத்திய சிறை-1, (தண்டனை) புழல், சென்னை- 66 தொலைபேசி எண்.044-26590615 26590615 26590615 என்ற முகவரிக்கு வந்து சேரும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://chennai.nic.in/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.