சென்னையில் செயல்பட்டு வரும் துறைமுகத்தில் காலியாக உள்ள Harbour Master பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ரூ.2.60 லட்சம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடத்திற்கு பைலட் லைசன்ஸ் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாகம் : சென்னை துறைமுகம் (Chennai Port Trust)
பணி : Harbour Master
தகுதி : விண்ணப்பதாரர் Master of Foreign going ship சான்றிதளுடன் Pilot license பெற்றிருக்க வேண்டும்.
மேலும் பணியில் 8 ஆண்டுகள் வரை முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
வயது வரம்பு : விண்ணப்பதாரர் 45 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் : மாதம் ரூ.1,00,000 முதல் ரூ.2,60,000 வரையில்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.chennaiport.gov.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு 03.07.2021 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : செயலாளர், சென்னை போர்ட் டிரஸ்ட், ராஜாஜி சாலை, சென்னை - 600 001.
தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப்படிவத்தினைப் பெறவும் www.chennaiport.gov.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.