சென்னை துறைமுகத்தில் காலியாக உள்ள பொதுநல அதிகாரி பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பி.ஏ சமூக அறிவியல் துறையில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் சென்னை துறைமுகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் வரும் 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
நிர்வாகம் : சென்னை துறைமுகம்
பணி : பொதுநல அதிகாரி
கல்வித் தகுதி : B.A Social Science துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு :
- விண்ணப்பதாரர் 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
- அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
ஊதியம் : மாதம் ரூ.10,750 - 300 - 16,750
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
இணைய முகவரி : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : இப்பணியிடத்திற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக https://www.chennaiport.gov.in/ என்ற இணையதளம் மூலம் 30.09.2020 என்ற தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : குறுகிய பட்டியல் மற்றும் நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.chennaiport.gov.in/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.