சென்னை மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வரும் தேசிய காசநோய் கட்டுப்பாட்டுத் திட்டத்தில் காலியாக உள்ள மருத்துவ அலுவலர், மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 89 பணியிடங்கள் உள்ள நிலையில் இதற்கு ரூ.45 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாகம் : தேசிய காசநோய் கட்டுப்பாட்டுத் திட்டம்
மேலாண்மை : Greater Chennai Corporation
பணி : மருத்துவ அலுவலர், மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர், முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர், மருந்தாளுனர், கணினி இயக்குபவர் உள்ளிட்ட பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
மொத்த காலிப் பணியிடங்கள் : 89
கல்வித் தகுதி :
10, 12வது தேர்ச்சி பெற்று அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் MBBS, MBA, முதுநிலை டிப்ளமோ, இளநிலை டிப்ளமோ, MSW, M.Sc, பட்டம், டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மேலும், மேற்கூறப்பட்ட பணிகளில் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
ஊதியம் : ரூ.10,000 முதல் அதிகபட்சம் ரூ.45,000 மாதம்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.chennaicorporation.gov.in அல்லது அதிகாரப்பூர்வ அறிவிப்புடன் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தினைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : திட்ட அலுவலர், திருத்தியமைக்கப்பட்ட தேசிய காசநோய் கட்டுப்பாட்டுத் திட்டம், 26, புளியந்தோப்பு நெடுஞ்சாலை, புளியந்தோப்பு, சென்னை - 600012
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 29.11.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.chennaicorporation.gov.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.