சென்னை மாநகராட்சி சுகாதாரத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் "காசநோய் இல்லா சென்னை'' திட்டத்தில் காலியாக உள்ள எக்ஸ்ரே டெக்னீசியன் பணியிடங்களை நிரப்பிட ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இப்பணியிடத்திற்கு 10 மற்றும் 12-வது தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் வரும் 15 ஆம் தேதி நடைபெறும் நேர்முகத் தேர்வில் பங்கேற்க வேண்டும்.
நிர்வாகம் : சென்னை மாநகராட்சி
மேலாண்மை : தமிழக அரசு
பணி : எக்ஸ்-ரே தொழில்நுட்ப வல்லுநர்
மொத்த காலிப் பணியிடங்கள் : 03
கல்வித் தகுதி : 10 மற்றும் 12வது அல்லது மருத்துவ கதிரியக்க தொழில்நுட்ப வல்லுநர் பட்டயம் அல்லது அதற்கு ஈடான சான்றிதழ் படிப்பில் தேர்ச்சி பெற்று 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். இளங்கலை பட்டதாரிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
ஊதியம் : ரூ.12,000
தேர்வு முறை : நேர்முகத் தேர்வு
நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் : மாவட்ட காசநோய் மையம், புளியந்தோப்பு, சென்னை - 600012.
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி : 15.03.2019
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறிய www.chennaicorporation.gov.in என்ற இணையதள முகவரியினை கிளிக் செய்யவும்.