சென்னை ஆவடியில் செயல்பட்டு வரும் விமானப் படையில் காலியாக உள்ள உதவியாளர், தலைமை ஆசிரியர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 21 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு 12-வது தேர்ச்சி பெற்றவர்கள் முதல் பட்டம் பெற்றவர்கள் வரையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாகம் : சென்னை விமானப் படை- ஆவடி
மேலாண்மை : மத்திய அரசு
பணி மற்றும் காலிப் பணியிட விபரங்கள் :
Principal, PGT, TGT, Clerk, Lab Attendant மற்றும் உதவியாளர் என மொத்தம் 21 பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
கல்வித் தகுதி : அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், டிப்ளமோ, பி.இ, பி.டெக், இளங்கலைப் பட்டம், முதுகலைப் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு :
- விண்ணப்பதாரர் 01.07.2021 தேதியின்படி 21 முதல் 50 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
- அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
ஊதியம் : ஒவ்வொரு பணிகளுக்கும் மாறுபட்ட ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காணவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் வரும் 15.02.2021 தேதிக்குள் "முதல்வர், விமானப்படை பள்ளி அவடி, சென்னை - 600055" என்ற முகவரிக்கோ அல்லது "[email protected]" என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ தங்களின் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 15.02.2021
தேர்வு முறை : எழுத்துத் தேர்வு, வகுப்பு எடுத்தல், நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://www.afschoolavadi.com/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.