இந்திய ரயில்வேத் துறையில் காலியாக உள்ள பொறியாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாகம் : ரயில்வேத் துறை
மேலாண்மை : மத்திய அரசு
பணி : இளநிலை தொழில்நுட்ப அலுவலர்
மொத்த காலிப் பணியிடங்கள் : 05
கல்வித் தகுதி : பொறியியல் துறையில் எலக்ட்ரிக்கல் பிரிவில் இளங்கலைப் பட்டம் அல்லது எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், எலக்ட்ரானிக்ஸ் போன்ற ஏதேனும் ஓர் பிரிவில் டிப்ளமோ முடித்து ஓர் அண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு : பொது பிரிவினர் 33 வயதிற்குள்ளும், ஓபிசி பிரிவினர் 36 வயதிற்கு உட்பட்டும், எஸ்சி, எஸ்டி பிரிவினர் 38 வயதிற்கு உட்பட்டும் இருக்க வேண்டும்.
ஊதியம் : ரூ.25,000 முதல் ரூ.30000 வரையில்
தேர்வு முறை : தொடர்புடைய பாடப்பிரிவில் பெற்றிருக்கும் மதிப்பெண்கள் மற்றும் பணி அனுபவம் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம் : ரூ.500. எஸ்சி, எஸ்டி, ஓபிசி, மற்றும் பெண்கள் ரூ.250 கட்டணமாகச் செலுத்த வேண்டும்.
கட்டணத்தைச் செலுத்தும் முறை : Sr.DFM/SUR என்னும் பெயருக்கு வங்கி வரவோலையாக எடுத்துச் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை : www.cr.indianrailways.gov.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்தவுடன் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து உரிய இடத்தில் கையொப்பமிட்டு அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்துக் கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பத்தினை அனுப்ப வேண்டிய முகவரி : Sr.DFM/SUR, Central Railway, Divisional Railway Manager's officer, Modikhana, Solapur - 413001
விண்ணப்பம் சென்று சேர வேண்டிய கடைசி நாள் : 14-08-2019
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 05-08-2019