மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடத்தினை நிரப்ப அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ள பி.இ, பி.டெக் பட்டதாரிகள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.
பணி : மேலாண்மைப் பயிற்சி (எம்டி) (டெலிகாம் செயல்பாடுகள்)
மொத்த காலியிடங்கள் : 300
கல்வித் தகுதி : பொறியியல் துறையில் டெலிகம்யூனிகேசன், எலக்ட்ரானிக்ஸ், கணினி, ஐடி, எலக்ட்ரிக்கல் உள்ளிட்ட பிரிவுகளில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு : 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
(அரசு விதிமுறைப்படி இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயதுவரம்பில் தளர்வு உண்டு)
ஊதியம் : மாதம் ரூ.24,900 முதல் ரூ.50,500 வரை
தேர்வு முறை : ஆன்லைன் தேர்வு, குழு விவாதம் மற்றும் நேர்முகத் தேர்வு
தேர்வு நடைபெறும் தேதி : 17.03.2019
விண்ணப்பக் கட்டணம் :
- பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு - ரூ.2,200
- மற்ற பிரிவினருக்கு - ரூ.1100
கட்டணம் செலுத்தும் முறை : ஆன்லைன் மூலமாக
விண்ணப்பிக்கும் முறை : www.bsnl.co.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி : 26.12.2019 முதல் 26.01.2019 வரை மட்டுமே
இப்பணியிடம் குறித்த மேலும் pவபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://www.bsnl.co.in/opencms/bsnl/BSNL/about_us/pdf/MT_EXT_NOTIFICATION_111218.pdf என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.