மத்திய அரசின் பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பேங்க் ஆப் பரோடா வங்கியில் காலியாக உள்ள Business Correspondent Supervisor பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ரூ.15 ஆயிரம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடத்திற்கு எம்.எஸ்சி, பிஇ போன்ற துறைகளில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணியிடத்திற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாகம் : பேங்க் ஆப் பரோடா (BOB)
பணி : Business Correspondent Supervisor
கல்வித் தகுதி :
- அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் M.Sc. (IT), BE (IT), MCA, எம்பிஏ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- அதோடு, Computer knowledge (MS Office, email, Internet) பெற்றிருக்க வேண்டும்.
- மேலும், ஊரக வாங்கி பணிகளில் 3 ஆண்டுகள் வரை பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு :
- ஓய்வு பெற்ற விண்ணப்பதாரர்கள் 65 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
- பிற விண்ணப்பதாரர்கள் 21 முதல் 45 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் : ரூ.15,000 மாதம்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் 25.09.2021 தேதிக்குள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு தங்களது விண்ணப்பப் படிவம் கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 25.09.2021 தேதிக்குள் விண்ணப்பம் கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்கவும்.
தேர்வு முறை : நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.bankofbaroda.in/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை காணவும்.