மத்திய அரசின் பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பேங்க் ஆப் பரோடா வங்கியில் காலியாக உள்ள உற்பத்தி மேலாளர் பணியிடத்தினை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாகம் : பேங்க் ஆப் பரோடா
பணி : உற்பத்தி மேலாளர்
காலிப் பணியிடம் : 06
கல்வித் தகுதி : எம்பிஏ, மேலாண்மைத் துறையில் முதுகலை டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
முன் அனுபவம் : சம்மந்தப்பட்ட துறையில் 5 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு : 01.02.2019 தேதியின்படி 28 முதல் 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
தேர்வு முறை : குழு விவாதம் மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம் :
- பொது மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு ரூ.600.
- எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளி விண்ணப்பத்தாரர்கள் ரூ.100
கட்டணம் செலுத்தும் முறை : ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை : www.bankofbaroda.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 2019 மார்ச் 18
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.bankofbaroda.com/writereaddata/Images/pdf/Detailed-Advertisement-with-link-to-apply.pdf என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.