மத்திய அரசிற்கு உட்பட்டுச் செயல்பட்டு வரும் பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பொறியாளர் மற்றும் மேற்பார்வையாளர் பணியிடத்தினை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பொறியியல் துறையில் சிவில் பட்டயப் படிப்பு மேற்கொண்டவர்கள் இதற்குத் தகுதியுடையவர்கள் ஆவர். இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாகம் : பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெம்
மேலாண்மை : மத்திய அரசு
மொத்த காலிப் பணியிடம் : 80
பணி மற்றும் பணியிட விபரம் :-
- பொறியாளர் (சிவில்) : 21
- மேற்பார்வையாளர் : 59
கல்வித் தகுதி :-
பொறியியல் துறையில் சிவில் பிரிவில் இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் பெற்றவர்கள் மற்றும் டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.
வயது வரம்பு : 34 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் :
பொறியாளர் : ரூ.62,100 முதல்
மேற்பார்வையாளர் : ரூ.34,680 முதல்
தேர்வு முறை : நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை : www.bhelpssr.co.in அல்லது https://careers.bhel.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை கீழ்க்கண்ட முகவரிக்கு அஞ்சல் மூலமாக அனுப்ப வேண்டும்.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி : Addl.General Manager(HR) BHEL, Power Sector Southern Region, 690, EVR Periyar Building, Anna Salai, Chennai-600035.
விண்ணப்பக் கட்டணம் :
- பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு - ரூ.200.
- மற்ற அனைத்துப் பிரிவினருக்கும் கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 18.02.2019
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://intapp.pssr.bhel.com:9082/FTA_Recruitment_Civil/FTA_Civil_2019_Advertisement_Eng.pdf அல்லது https://careers.bhel.in என்ற லிங்க்கை கிளிக் செய்யவும்.