பெங்களூருவில் உள்ள ராணுவ மையமான ஏ.எஸ்.சி. மையம் மற்றும் கல்லூரியில் பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை அனுப்பலாம். கூடுதல் விவரங்களுக்கு indianarmy.nic.in என்ற இந்திய ராணுவத்தின் அதிகாரப்பூர்வ இணையதள முகவரியைத் தொடர்புகொண்டு அறியலாம்.
மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்த ராணுவ மையமான ஏஎஸ்சி மையம், கல்லூரியில்தான் தற்போது பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்த ஏஎஸ்சி மையத்தில் தீயணைப்பு 30, தீயணைப்பு டிரைவர் 10, சிவிலியன் மோட்டார் டிரைவர் 9 உட்பட 71 இடங்கள் காலியாக உள்ளன.

ஏஎஸ்சி மையம், கல்லூரி பணியிடங்களுக்கான கல்வித்தகுதி:
இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க பிளஸ் 2, தொடர்புடைய பிரிவில் பணி அனுபவம் தேவைப்படும்.
ஏஎஸ்சி மையம், கல்லூரி பணியிடங்களுக்கான வயதுத்தகுதி:
டிரைவர் பணிக்கு 18 - 27, மற்ற பணிக்கு 18 - 25 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகையும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஏஎஸ்சி மையம், கல்லூரி பணியிடங்களுக்கான தேர்ச்சி முறை:
எழுத்துத்தேர்வு, ஸ்கில் தேர்வு, செய்முறை தேர்வு ஆட்கள் இந்தப் பணிக்குத் தேவைப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை:
இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, உரிய சான்றிதழ்களுடன் கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி: The Presiding Officer, Civilian Direct Recruitment Board, CHQ, ASC Centre (South) - 2 ATC, Agram Post, Bangalore -
560 007.
கடைசிநாள்:
விண்ணப்பங்களை அனுப்ப வரும் பிப்ரவரி 2-ம் தேதி கடைசி நாளாகும்(2.2.2024).
இணையதள முகவரி: கூடுதல் விவரங்களுக்கு indianarmy.nic.in என்ற இந்திய ராணுவத்தின் அதிகாரப்பூர்வ இணையதள முகவரியைத் தொடர்புகொண்டு அறியலாம்.


Click it and Unblock the Notifications












