மத்திய அரசு நிறுவனமான பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) நிறுவனத்தில் தொழிற் பழகுநர் சட்டம் 1961 ஆம் விதிகளுக்குட்பட்டு கீழ்வரும் பிரிவுகளுக்கு 2017-2018 ஆம் ஆண்டிற்கான தொழிற் பழகுநர் (அப்ரண்டிஸ்) பயிற்சிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தகுதியான தொழிற்பயிற்சி முடித்தவர்களிடமிருந்து இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியின் பெயர்: அப்ரண்டிஸ்
பணியிடம்: கர்நாடக மாநிலம்
பணி விவரம்: எலக்ட்ரானிக்ஸ் மெக்கானிக், பிட்டர், டர்னர், மெஷினிஸ்ட், வெல்டர், எலக்ட்ரோபிளேட்டர், ஏ.சி., அண்டு ரெப்ரிஜிரேஷன்
கல்வித்தகுதி: அரசால் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்பயிற்சி மையத்தில் 2015 அக்., 1க்குப் பின்னர் என்சிவிடி அங்கீகாரம் பெற்ற கைவினைஞர் பயிற்சியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: விண்ணப்பதாரர்கள் அக்., 15, 2018-இன் படி 21 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: தகுதியானவர்கள் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். மைய வாரியாக நேர்முகத்தேர்வு மூலமாக தேர்ச்சி இருக்கும். ஒவ்வொரு மையத்திற்கும் வெவ்வேறு தேதிகளில் தேர்வு நடத்தப்பட உள்ளது. முழுமையான விபரங்களை இந்த லிங்க கிளிக் செய்து பார்த்து கொள்ளவும்.
குறிப்பு: நேர்முகத்தேர்வுக்கு செல்லும் போது பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், ஐடிஐ ஒரிஜினல் மதிப்பெண் சான்றிதழ், சாதிச் சான்றிதழ் , கல்லூரி ஐடி கார்டு போன்றவற்றை எடுத்துச் செல்ல வேண்டும்.
பயிற்சி ஊதியம் மற்றும் பயிற்சி காலம்: ஒரு வருட பயிற்சிக் காலத்தில் மாதம் ரூ.10 ஆயிரம் வழங்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு இந்த லிங்கை கிளிக் செய்து அதிகாரப்பூர்வ இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்
நேர்முகத்தேர்வு தொடங்கும் தேதி: 25-05-2018