திருப்பூர் மாவட்டத்தில் வேலைவாய்ப்பு சட்டம் சார்ந்த விவரங்களை பாமர மக்களுக்கு எடுத்துரைக்க சட்டம் சார்ந்த தன்னார்வ தொண்டு செய்வோர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கு தகுதியும் திறமையும் விருப்பமுள்ளோர்கள் ஜூலை 28க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
மொத்த் காலியிடங்கள் 175 நிரப்பபடவுள்ளது , பணியின் பெயர் பாரா லீகல் வாலண்டியர்ஸ் ஆகும் .சம்பளமாக தினசரி ரூபாய் 250 பெற்றுகொள்ளலாம் சேவை மனப்பான்மையுடன் செயல் பட வேண்டும் . குறைந்தது 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும்.
விண்ண்ப்பிக்கும் முறையானது அருகிலுள்ள நீதிமன்றங்களில் இயங்கிவரும் சட்டப்பணிகள் ஆணைக்குழு அலுவலகங்களில் விண்ணப்பங்கள் பெற்று விண்ணப்பிக்கலாம் . பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை நேரடியாகவோ அல்லது அஞ்சல் மூலமாகவோ வரும் ஜூலை 28 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் . முழுமையான விவரங்களை தெரிந்து கொள்ள திருப்பூர் மாவட்ட இணையத்தளத்தின் www.ecourts.gov.in/tn/tiruppur மூலம் அறிந்து கொள்ளலாம் .
தேவையான தகவல்களை பூர்த்தி செய்து விருப்பமுடையோர்கள் விண்ணப்பிக்க தவற வேண்டாம். சட்டம் சார்ந்த தகவல்களை சாதரண மக்கள் அறிந்து கொள்ள உதவவும் முடியும். அத்துடன் அடிப்படை சம்பளமும் பெற்று கொள்ளலாம் . பத்தாம் வகுப்பு மட்டுமே கல்வித்தகுதியாகும் .
சார்ந்த பதவிகள்:
மத்திய அரசின் அஞ்சல் நிலையத்தில் ஒட்டுநர் பணி வேலைவாய்ப்பு
எலக்ட்ரானிக்ஸ் கார்பரேஷனில் வேலைவாய்ப்பு நேரடி தேர்வில் ஜூலை 26 இல் நடைபெறுகிறது