மத்திய அரசிற்கு உட்பட்ட பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் (BARC) காலியாக உள்ள Scientific Officers பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பல்வேறு பிரிவுகளில் இப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ள நிலையில் இதற்கு ரூ.55 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாகம் : பாபா அணு ஆராய்ச்சி மையம் (BARC)
மேலாண்மை : மத்திய அரசு
பணி : Scientific Officers
கல்வித் தகுதி :
- அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் பணிக்கு தொடர்புடைய பாடங்களில் B.E, B.Tech, B.Sc, M.Tech, M.S போன்ற ஏதேனும் ஒரு பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- மேலும், GATE தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பது கட்டாயம்.
வயது வரம்பு :
- விண்ணப்பதாரர் 26 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
- அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
ஊதியம் : ரூ.55,000 மாதம்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://www.barconlineexam.in/ எனும் இணையதளத்தின் விண்ணப்பப் படிவம் பெற்று 11.02,2022 தேதிக்குள் ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 11.02,2022 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம் :
- பொது மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு ரூ.500
- இதர விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் கிடையாது.
தேர்வு முறை : விண்ணப்பதாரர் கேட் மதிப்பெண் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.barc.gov.in அல்லது மேலே குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை காணவும்.