காஞ்சிபுரம் மாவட்டம், கல்பாக்கத்தில் செயல்பட்டு வரும் பாபா அணுசக்தி ஆராய்ச்சி மையம் மற்றும் அணுக்கரு மறுசுழற்சி வாரியத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் வரும் ஆகஸ்ட் 7ம் தேதிக்குள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாகம் : பாபா அணுசக்தி ஆராய்ச்சி மையம் மற்றும் அணுக்கரு மறுசுழற்சி வாரியம், கல்பாக்கம்
மொத்த காலிப் பணியிடம் : 47
பணி மற்றும் பணியிட விபரங்கள்:-
- Plant Operator (07)
- Laboratory Assistant (04)
- Fitter (12)
- Welder (02)
- Turner (01)
- Electrician (04)
- Instrument Mechanic (08)
- Electronic Mechanic (04)
- A/C Mechanic (01)
இது தவிர நேரடி தேர்வின் மூலம் டெக்னீசியன் பணியிடத்திற்கு நான்கு பேர், Technician/C (Boiler Operator) பணிக்கு மூன்று பேர் மற்றும் Technician/B (Painter) பணிக்கு ஒருவர் என இந்த நேர்முகத் தேர்வில் தேர்வு செய்யப்படுவர்.
வயது வரம்பு : 07.08.2019 தேதியின்படி 18 முதல் 25 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி : பணி தொடர்பான பிரிவில் ஐடிஐ படிப்பை முடித்து தொழில்பழகுநர் பயிற்சியும் முடித்திருக்க வேண்டும்.
ஊதியம்:-
- Stipendiary Trainees பணிகளுக்கு முதல் ஆண்டு மாதம் ரூ.10,500 ஊதியம் வழங்கப்படும்.
- இரண்டாம் ஆண்டு முதல் ரூ.12,500 மாதாந்திர ஊதியமாக வழங்கப்படும்.
- Technician - C பணிக்கு மாத ஊதியம் ரூ.25,500 ஆகும்.
- Technician -B பணிக்கு மாதம் ரூ. 21700 ஊதியம்
விண்ணப்பிக்கும் முறை : https://recruit.barc.gov.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : முதல்நிலைத் தேர்வு, துறைவாரியான தேர்வு மற்றும் திறன் தேர்வு மூலம் தகுதியானவர் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்:-
- பொது மற்றும் ஓபிசி பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு ரூ.100
- எஸ்சி/எஸ்டி பிரிவினர், மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர் ஆகியோர் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : ஆகஸ்ட் 7ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.barc.gov.in என்னும் அதிகாரப்பூர்வ இணைப்புகளைக் காணவும்.