மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான பேங்க் ஆப் இந்தியா வங்கியில் (BOI) காலியாக உள்ள அலுவலக உதவியாளர், அட்டண்டர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 33 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு 8,10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. ரூ.20 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடங்களுக்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

மேலாண்மை : மத்திய அரசுப் பணி
நிர்வாகம் : பேங்க் ஆப் இந்தியா வங்கி (BOI)
மொத்த காலிப் பணியிடம் : 33
பணி : Faculty Member, Office Assistant, Attendant மற்றும் Watchman cum Gardener ஆகிய பணிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
வயது வரம்பு :
- Office Assistant - 18 முதல் 45 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
- Faculty Member - 25 முதல் 63 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
- Attendant மற்றும் Watchman cum Gardener - 18 முதல் 65 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி :
- விண்ணப்பதாரர் 8, 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- மேலும், டிப்ளமோ, பட்டம் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
ஊதியம் : ரூ.8,000 முதல் அதிகபட்சமாக ரூ.20,000 மாதம்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு 1: இங்கே கிளிக் செய்யவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு 2: இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை :
மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் 31.08.2021 மற்றும் 04.09.2021 தேதிக்குள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களைப் பெறவும், விண்ணப்பப் படிவத்தினை பூர்த்தி செய்யவும் https://www.boiaxamf.in/home அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை காணவும்.


Click it and Unblock the Notifications












