பேங்க் ஆஃப் பரோடாவில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடம்: 600
பணி: புரோபேஷனரி அதிகாரி
கல்வித் தகுதி: 55 சதவிகித மதிப்பெண்ணுடன் ஏதாவது ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 20-28க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: பொதுப் பிரிவினருக்கு ரூ.600. எஸ்சி,எஸ்டி பிரிவினருக்கு ரூ.100.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மூலமாக விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
மேற்படிப்பு விபரம்: தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மணிப்பாலில் 9 மாதங்கள் பயிற்சி அளிக்கப்படும். இதற்கான கட்டணம்: ரூ.3,45000. வெற்றிகரமாக படிப்பை முடிக்கும்பட்சத்தில் முதுநிலை டிப்ளமோ சான்றிதழ் உடன் ஸ்கேல் I அந்தஸ்தில் பணி வழங்கப்படும். 5 வருடம் பணியை வெற்றிகரமாக முடிக்கும் பட்சத்தில் கோர்ஸ் பீஸ் திரும்ப வழங்கப்படும்.
மேலும் காலியிட விவரங்கள் அறிய இந்த லிங்கை கிளிக் செய்து இணையதள லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசித் தேதி: 02-07-2018
தேர்வு நடைபெறும் தேதி: 28-07-2018