மத்திய அரசின் பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பரோடா வங்கியில் காலியாக உள்ள மேலாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாகம் : பரோடா வங்கி
மேலாண்மை : மத்திய அரசு
பணி : மூத்த தொடர்பு மேலாளர்
மொத்த காலிப் பணியிடங்கள் : 96
வயது வரம்பு : 01.03.2019 தேதியின்படி 25 முதல் 40 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
பணி : மண்டல தலைவர்
காலிப் பணியிடங்கள் : 04
வயது வரம்பு : 01.03.2019 தேதியின்படி 35 முதல் 45 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி : ஏதேனும் ஓர் துறையில் இளங்கலை பட்டத்துடன் பணி அனுப்பவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு முறை : எழுத்துத் தேர்வு, குழுவிவாதம் மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம் : ரூ.600. எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளி விண்ணப்பத்தாரர்கள் ரூ.100 கட்டணமாக செலுத்த வேண்டும்.
கட்டணம் செலுத்தும் முறை : ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை : www.bankofbaroda.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 29.03.2019
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.bankofbaroda.co.in என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.