தமிழக அரசிற்கு உட்பட்ட மதுரை கருவூல துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 6 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.50 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் வரும் மார்ச் 9ம் தேதிக்குள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாகம் : மதுரை கருவூல துறை
மேலாண்மை : தமிழக அரசு
பணி : அலுவலக உதவியாளர்
மொத்த காலிப் பணியிடங்கள் : 06
கல்வித் தகுதி : 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு : 01.01.2020 தேதியின்படி 28 முதல் 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் : மாதம் ரூ.15700 முதல் ரூ.50,000 வரையில்
விண்ணப்பிக்கும் முறை : இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://madurai.nic.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி :
சம்பளக் கணக்கு அலுவலர், சம்பளக் கணக்கு அலுவலகம், 224, தெற்கு வீதி, மதுரை - 625 001
தேர்வு முறை : நேர்முகத் தேர்வு மற்றும் எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி : 09.03.2020
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://cdn.s3waas.gov.in/s3f5f8590cd58a54e94377e6ae2eded4d9/uploads/2020/02/2020021846.pdf என்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை காணவும்.