DHS Salem Doctor Recruitment 2023
சேலம் மாவட்டத்தில், காலியாக உள்ள மருத்துவர்கள், பலநோக்கு சுகாதார பணியாளர்கள், உதவியாளர்கள் பணியிடங்களுக்கு, தகுதி மற்றும் ஆர்வமுள்ளவர்கள் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கு, விண்ணப்பிக்க நாளை கடைசி நாளாகும்.
நிர்வாகம் : மாவட்ட நலவாழ்வு சங்கம்(சேலம்)
மேலாண்மை : மாநில அரசு

பணி விவரம்
Ø மருத்துவர்கள்
Ø பலநோக்கு சுகாதார பணியாளர்
Ø உதவியாளர்கள்
கடைசி தேதி - 10.03.2023
பணியிடங்கள் எண்ணிக்கை: 84
நோட் இட் ப்ளீஸ்...!
விண்ணப்பங்கள் தொடங்கிய தேதி : 01-03-2023
விண்ணப்பிக்க கடைசி தேதி : 10-03-2023
ஊதியம்
Ø மருத்துவர்கள் - ரூ.60 ஆயிரம்
Ø பலநோக்கு சுகாதார பணியாளர் - ரூ.14 ஆயிரம்
Ø உதவியாளர்கள்- ரூ.8,500
ஒப்பந்த அடிப்படையில், இப்பணியிடங்களுக்கு தொகுப்பூதியம்நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
கல்வித்தகுதி
மருத்துவர்கள் பணிக்கு கல்வி தகுதியானது, குறைந்தது எம்.பி.பி.எஸ்., முடித்திருக்க வேண்டும்.
பல்நோக்கு சுகாதார பணியாளர் பணிக்கு, கல்வி தகுதியானது பல்நோக்கு சுகாதார பணியாளர் பயிற்சி பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
உதவியாளர்கள் பணிக்கு கல்வி தகுதியானது, 8ஆம் வகுப்பு சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
நோட் இட் ப்ளீஸ்...!
தகுதியான நபர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் கொடுக்கப்பட்ட விண்ணப்பங்கள் மாதிரியை பதிவிறக்கம் செய்து, அவற்றை பூர்த்தி செய்து, பணிக்கு தேவையான கோரப்பட்ட அனைத்து சான்றிதழ்களின் நகல்களில் சுய ஒப்பமிட்டு இணைத்து நாளை(மார்ச்.10) மாலைக்குள் அனுப்ப வேண்டும்.
வயது வரம்பு
மருத்துவர் பணிக்கு வயது வரம்பானது, 40க்குள் இருக்க வேண்டும்.
பல்நோக்கு சுகாதாரப் பணியாளர், உதவியாளர் பணிகளுக்கு, வயது வரம்பானது 50க்குள் இருக்க வேண்டும்.
இப்பணியிடங்களுக்கு, நேர்முகத் தேர்வு நடைபெறும் என, அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை
இப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க, https://salem.nic.in/
என்ற இணையதள முகவரி வாயிலாக விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, கீழ்கண்ட முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
முகவரி
நிர்வாக செயலாளர்/மாவட்ட நல்வாழ்வு சங்கம்,
துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள்,
துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் அலுவலகம்
பழைய நாட்டாண்மை கழக கட்டட வளாகம்
சேலம் மாவட்டம் - 636 001.
இந்த முகவரிக்கு விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து மார்ச் 10ஆம் தேதி மாலை 5.30 மணிக்குள் அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Ø பணிகள் முற்றிலும் தற்காலிகமானது.
Ø எந்தவொரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்படமாட்டாது.
Ø பணியில் சேருவதற்கான சுய விருப்ப ஒப்புதல் கடிதம் அளிக்க வேண்டும்.
அவசரம் மற்றும் அவசியம் கருதி, இந்த பதவிகளுக்கு உடனடியாக நிரப்ப வேண்டியுள்ளதால், ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதற்கு 10.03.2023 அன்று மாலை 5.45 மணிக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ விண்ணப்பங்கள் மேற்குறிப்பிட்ட முகவரிக்கு வந்து சேரும் வண்ணம் அனுப்ப வேண்டும்.
அதன் பின், வரப்பெறும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படாது.
மிஸ் பண்ணிடாதீங்க...! டவுன்லோடு ப்ளீஸ்...!
என்ற லிங்கை கிளிக் செய்து விண்ணப்ப படிவத்தை டவுன்லோடு செய்ய வேண்டும்.


Click it and Unblock the Notifications












