DHS Tiruvannamalai Recruitment 2022
திருவண்ணாமலை மாவட்டத்தில், இணை இயக்குநர் நலப்பணிகள் அலுவலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு, தகுதி மற்றும் ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என, அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நிர்வாகம் : தேசிய நலவாழ்வு குழுமம்
மேலாண்மை : மாநில அரசு
பணி விவரம்
Ø நிதி உதவியாளர் - (Accountant Assistant)
Ø பிசியோதெரபிஸ்ட் - (Physiotherapist)
Ø செவிலியர் - (Sector Health Nurse/ Urban Health Manager)
நேர்காணல் நடைபெறும் தேதி - 02.12.2022
பணியிடங்கள் எண்ணிக்கை: 3
நோட் இட் ப்ளீஸ்...!
விண்ணப்பங்கள் தொடங்கிய தேதி : 18-11-2022
விண்ணப்பிக்க கடைசி தேதி : 02-12-2022
நேர்காணல் நடைபெறும் நாள்: 02-12-2022, நேரம்: காலை 10:00 மணி
ஊதியம்
Ø நிதி உதவியாளர் - ரூ.16,000
Ø பிசியோதெரபிஸ்ட் - ரூ.13,000
Ø செவிலியர் - ரூ.25,000
கல்வித்தகுதி
நிதி உதவியாளர் பணிக்கு, பி.காம் பட்டப்படிப்புடன் Tally நன்கு தெரிந்திருக்க வேண்டும்.
பிசியோதெரபிஸ்ட் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து Bachelor of Physiotherapy (BPT) சம்பந்தப்பட்ட துறையில், இளங்கலை பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
நகர்ப்புற சுகாதார மேலாளர்/ சுகாதார செவிலியர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் எம்.எஸ்.சி. நர்ஸிங் படிப்பு படித்திருக்க வேண்டும்.
மேலும் Community Health,Paediatrics, Obstetrics & Gynacology ஆகியவைகள் பற்றியும் தெரிந்திருக்க வேண்டும். பொது சுகாதாரத்துறையில், பணி அனுபவம் இருக்க வேண்டும்.
பணிக்கு B.Sc. Nursing தேர்ச்சி உடன் பொது சுகாதார துறையில், மூன்றாண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும்.
நோட் இட் ப்ளீஸ்...!
தகுதியான நபர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் கொடுக்கப்பட்ட விண்ணப்பங்கள் மாதிரியை பதிவிறக்கம் செய்து, அவற்றை பூர்த்தி செய்து, பணிக்கு தேவையான கோரப்பட்ட அனைத்து சான்றிதழ்களின் நகல்களில் சுய ஒப்பமிட்டு இணைத்து 05.12 2022 அன்று மாலை 5.00 மணிக்குள் அனுப்ப வேண்டும்.
எடுத்துவர வேண்டிய ஆவணங்கள்
v புகைப்படம்
v கல்வி சான்றிதழ்கள்
v சாதிச்சான்று
v முன்னுரிமை சான்று
எங்கு நேர்காணல்
கெளரவ செயலாளர்/ துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள்,
மாவட்ட நல்வாழ்வு சங்கம்,
துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் அலுவலகம்,
பழைய அரசு மருத்துவமனை வளாகம், செங்கம் சாலை, திருவண்ணாமலை.
என்ற முகவரியில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ விண்ணப்பங்களை அளிக்கலாம்.
Ø பணிகள் முற்றிலும் தற்காலிகமானது.
Ø எந்தவொரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்படமாட்டாது.
Ø பணியில் சேருவதற்கான சுய விருப்ப ஒப்புதல் கடிதம் அளிக்க வேண்டும்.
அவசரம் மற்றும் அவசியம் கருதி, இந்த பதவிகளுக்கு உடனடியாக நிரப்ப வேண்டியுள்ளதால், ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதற்கு 02.12.2022 அன்று மாலை 5.00 மணிக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ விண்ணப்பங்கள் மேற்குறிப்பிட்ட முகவரிக்கு வந்து சேரும் வண்ணம் அனுப்ப வேண்டும்.
அதன் பின், வரப்பெறும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படாது. 02.12.2022 அன்று நேர்முகத்தேர்வு நடத்தப்படும்.
மிஸ் பண்ணிடாதீங்க...! டவுன்லோடு ப்ளீஸ்...!
https://tiruvannamalai.nic.in/notice_category/recruitment/
என்ற லிங்கை கிளிக் செய்து விண்ணப்ப படிவத்தை டவுன்லோடு செய்ய வேண்டும்.