அண்ணா பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள நிபுணத்துவ உதவியாளர் மற்றும் எழுத்தர் உதவியாளர் பணியிடத்தினை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பி.இ, கணினி அறிவியல் பட்டப்படிப்பு முடித்தவர்கள் முதல் ஏதேனும் ஓர் துறையிர் தேர்ச்சி பெற்றவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம். இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாகம் : அண்ணா பல்கலைக் கழகம்
பணி :-
- நிபுணத்துவ உதவியாளர்
- எழுத்தர் உதவியாளர்
கல்வித் தகுதி :-
நிபுணத்துவ உதவியாளர் : பி.இ. மென்பொருள் பொறியியல், பி.இ கணினி அறிவியல், பி.டெக் தகவல் தொழில்நுட்ப பொறியியல், எம்.இ. மென்பொருள் பொறியியல்
எழுத்தர் உதவியாளர் : ஏதேனும் ஓர் துறையில் பட்டப்படிப்பு
ஊதியம் :-
நிபுணத்துவ உதவியாளர் : ரூ.703 (ஒரு நாள்)
எழுத்தர் உதவியாளர் : ரூ.415 (ஒரு நாள்)
விண்ணப்பிக்கும் முறை :-
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.annauniv.edu என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அதனைப் பூர்த்தி செய்து அதிகாரப் பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 20.02.2019 தேதிக்குள் விண்ணப்பம் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.
தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.annauniv.edu அல்லது https://www.annauniv.edu/pdf/CFR, Rec.Notification Jan.2019.pdf?fbclid=IwAR04U2pSrFdLLYJDz2yGzjl_W147zakTzb6hbZYXyetAa7lNADpAsRm2AHU என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.