ஏர்லைன் அலைடு சர்வீஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பாதுகாப்பு மேற்பார்வையாளர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 51 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாகம் : ஏர்லைன் அலைடு சர்வீஸ் லிமிடெட்
பணி : மேற்பார்வையாளர் (பாதுகாப்பு)
மொத்த காலிப் பணியிடங்கள் : 51
கல்வித் தகுதி : இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் ஏதேனும் ஓர் துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
மேலும் இந்தி மற்றும் ஆங்கிலம் மொழிகளில் பேசத் தெரிந்திருக்க வேண்டும்.
வயது வரம்பு : 15.02.2020 தேதியின்படி 35 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
ஊதியம் : மாதம் ரூ. 22,371
விண்ணப்பிக்கும் முறை : தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.airindia.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பப்படிவத்தினைப் பெற்று, பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை தேவையான சான்றிதழ் நகல்களையும் இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அஞ்சலில் அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி :
Alliance Air Personnel Department Alliance Bhawan, Domestic Terminal-1, 1.G.1 Airport, New Delhi - 110 037.
தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் உடற்தகுதித் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம் : ரூ.1000. இதனை AIRLINE ALLIED SERVICES LIMITED என்னும் பெயரில் டி.டி.யாக எடுத்து அனுப்ப வேண்டும். எஸ்சி, எஸ்டி, முன்னாள் இராணுவத்தினர் பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் கட்டணம் செலுத்தத் தேவையில்லை.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி : 04.03.2020
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://www.airindia.in/writereaddata/Portal/career/868_1_Supervisor-Security-Feb-2020.pdf என்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காணவும்.