ஏர் இந்தியா இன்ஜினியரிங் சர்வீஸஸ் லிமிடெட் நிறுவனத்தில் (AIESL) காலியாக உள்ள Chief Security Officer பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ரூ.80 ஆயிரம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணிக்கு ஏதேனும் ஓர் துறையில் பட்டம் பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : ஏர் இந்தியா இன்ஜினியரிங் சர்வீஸஸ் லிமிடெட் (AIESL)
பணி : Chief Security Officer
மொத்த காலிப் பணியிடம் : 01
கல்வித் தகுதி : அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் பணிக்கு தொடர்புடைய பிரிவில் ஏதேனும் ஒரு பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
மேலும், security operation பிரிவில் குறைந்தது 10 ஆண்டுகள் வரையில் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு : விண்ணப்பதாரர் 01.12.2021 தேதியின்படி 55 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் : ரூ.80,000 மாதம்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் 14.01.2022 தேதிக்குள் விண்ணப்பப் படிவத்தினை பூர்த்தி செய்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
Chief of Personnel
Personnel Department,
AI Engineering Services Limited
2nd Floor, CRA Building, Safdarjung Airport Complex,
Sri Aurobindo Marg, New Delhi - 110 003
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 14.01.2022 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : நேர்முகத் தேர்வு மற்றும் மருத்துவ பரிசோதனை அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.airindia.in/ அல்லது அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












