மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் இந்திய வேளாண் காப்பீட்டு நிறுவனத்தில் (AIC) காலியாக உள்ள Chief Manager (Scale V) பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ரூ.1 லட்சம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடத்திற்கு மேலாண்மைத் துறையில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : விவசாய காப்பீட்டு நிறுவனம் (AIC)
மேலாண்மை : மத்திய அரசு
பணி : Chief Manager (Scale V)
மொத்த காலிப் பணியிடங்கள் : 01
கல்வித் தகுதி : அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் ஏதேனும் ஒரு பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
மேலும் முதுநிலைப் பட்டம், Diploma in Financial Management படித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
வயது வரம்பு : விண்ணப்பதாரர் 50 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
அரசு விதிமுறைப்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
ஊதியம் : ரூ.79,605- 2300 (3) ரூ.86,505 - ரூ.25,90 (6) - ரூ.1,02,045 மாதம்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்குறிப்பிட்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.aicofindia.com எனும் இணையதளத்தின் மூலம் விண்ணப்பப் படிவம் பெற்று, பூர்த்தி செய்து 09.02.2022 தேதிக்குள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 09.02.2022 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு, பின் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.aicofindia.com/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு இணையதள முகவரியைக் காணவும்.


Click it and Unblock the Notifications












