இந்திய விமான ஆணைய நிறுவனமான ஏ.ஏ.ஐ.- யின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் துணை நிறுவனம் 'கார்கோ லாஜிஸ்டிக்ஸ் அண்ட் அல்லைடு சர்வீசஸ் கம்பெனி லிமிடெட். இந்நிறுவனத்தின் சென்னை விமான தளத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும்.
நிர்வாகம் : கார்கோ லாஜிஸ்டிக்ஸ் அண்ட் அல்லைடு சர்வீசஸ் கம்பெனி லிமிடெட்
மேலாண்மை : இந்திய விமான ஆணையம்
பணி :
- செக்யூரிட்டி பெர்சனல்
- எக்ஸ்ரே ஸ்கிரீனர்
மொத்த காலிப் பணியிடங்கள் : 176
கல்வித் தகுதி :
- ஏதேனும் ஓர் பிரிவில் பட்டம் பெற்றிருப்பதுடன் இந்தி, ஆங்கிலம் மற்றும் மண்டல மொழியறிவு பெற்றிருக்க வேண்டும்.
- விமான போக்குவரத்து பாதுகாப்பு தொடர்பான அடிப்படை சான்றிதழ் பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
வயது வரம்பு : 01.06.2019 தேதியின்படி 45 வயதுக்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
உடற்தகுதி : ஆண் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 170 செ.மீ. உயரமும், பெண்கள் 157 செ.மீ. உயரமும் இருக்க வேண்டும்.
தேர்வு முறை : உடல் உறுதித் தேர்வு, உடல் அளவுத் தேர்வு, எழுத்துத் தேர்வு ஆகியவற்றுக்கு உட்படுத்தப்பட்டு தேர்ச்சி பெறுபவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர். விமானதள பாதுகாப்பு தொடர்பான சான்றிதழ் பெற்றவர்கள் நேரடியாக நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை : www.aaiclas.org என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி : 20.06.2019 (இன்று)
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.aaiclas.org என்னும் அதிகாரப்பூர்வ இணையதள முகவரியினை கிளிக் செய்யவும்.