கொரோனா தொற்றின் காரணமாக பள்ளிகளை தொடர்ந்து செயல்படுத்துவதில் பல்வேறு இடர்பாடுகள் ஏற்பட்டு வருகிறது. இதனிடையே, 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்துவதில் குழப்பங்கள் நீடித்து வரும் நிலையில் கட்டாயம் இத்தேர்வுகள் நடைபெறும் என தமிழக பள்ளிக் கல்வித் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்று 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான முதல் திருப்புதல் தேர்விற்கு உரிய அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, வரும் பிப்ரவரி 9 முதல் 15ம் தேதி வரையிலும் நடைபெறவுள்ளது.
தொடர்ந்து, இரண்டாவது திருப்புதல் தேர்வு மார்ச் 28ம் தேதி தொடங்கி ஏப்ரல் 4ம் தேதி வரையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கையில் படி கடந்த சில வாரங்களாக பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில் நாளை பிப்ரவரி 1ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications












