மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் துறைகளில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்பும் வகையில் யுபிஎஸ்சி சார்பில் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் யுபிஎஸ்சி-யின் அதிகாரப் பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பூர்த்து செய்து பயணடையலாம்.
பணிகள் மற்றும் காலிப் பணியிடம்:-
அட்மினிஸ்ட்ரேட்டிவ் ஆபிசர் : 08
லெக்சரர் அப்ளைடு மெக்கானிக்ஸ் : 01
லெக்சரர் கெமிக்கல் இன்ஜினியரிங் : 02
லெக்சரர் சிவில் இன்ஜினியரிங் : 01
லெக்சரர் இன்பர்மேசன் டெக்னாலஜி பணியிடம் : 01
மொத்த காலிப் பணியிடம் : 13
கல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் மெக்கானிக்கல், சிவில், கெமிக்கல், இன்பர்மேசன் டெக்னாலஜி, இன்ஜினியரிங் போன்ற பிரிவுகளில் பட்டம்
வயது வரம்பு : 35 வயதிற்கு உட்பட்டு
(எஸ்சி, எஸ்டி பிரிவினர்களுக்கு அரசு விதிமுறைப் படி வயதுவரம்பில் தளர்வு ஏற்படுத்தப்படும்)
ஊதியம் : ரூ.15,600 முதல் ரூ.39,100 வரை
விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்
விண்ணப்பக் கட்டணம் : 25 ரூபாய் (எஸ்பிஐ வங்கியில்)
(எஸ்.சி, எஸ்டி விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் ஏதுமில்லை)
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 11.10.2018
விண்ணப்பிக்கும் முறை :-
யுபிஎஸ்சி-யின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இப்பணியிடங்களுக்கான இதர விபரங்களும், விண்ணப்பங்களும் வெளியிடப்பட்டுள்ளன. விண்ணப்பிக்க விரும்புவோர் https://upsconline.nic.in/ora/VacancyNoticePub.php என்னும் அதிகாரப்பூர்வ இணையதள லிங்க்கை கிளிக் செய்து விண்ணப்பப் படிவத்தினை பெற்றுக் கொள்ளலாம்.