இந்திய வனத்துறை சர்வீசஸ் (ஐ.எப்.எஸ்.,) பணியில் 150 காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வந்துள்ளது. இந்தப் பணியிடங்களுக்கான தேர்வெழுத விருப்பமுள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். இதற்காந அறிவிப்பை மத்திய பொதுப் பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி) அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு www.upsc.gov.in என்ற இணையதள முகவரியைக் கிளிக் செய்து அறியலாம்.
ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற பணியடங்களை நிரப்பும் யுபிஎஸ்சி-தான் இந்த ஐஎப்எஸ் பணியிடங்களையும் நிரப்பவுள்ளது.

ஐஎப்எஸ் பணியிடங்களுக்கான கல்வித்தகுதி
இந்த ஐஎப்எஸ் தேர்வெழுத ஏதாவது ஒரு பிரிவில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
ஐஎப்எஸ் பணியிடங்களுக்கான வயதுத்தகுதி: 1.8.2024 அடிப்படையில் 21 - 32 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.
எத்தனை முறை எழுதலாம்: பொதுப்பிரிவினர் 6, ஓ.பி.சி., பிரிவினர் 9 முறை மட்டுமே இந்தத் தேர்வை எழுத முடியும். எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு இதில் வரம்பு இல்லை.
தேர்ச்சி முறை: இரண்டு கட்ட எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் ஆட்கள் இந்தப் பணியிடங்களுக்குத் தேர்வு செய்யப்படுவர்.
தேர்வு மையம்: பிரிலிமினரி தேர்வு சென்னை, கோவை, மதுரை, திருச்சி, வேலுாரில் நடைபெறும். மெயின் தேர்வு சென்னையில் நடைபெறும்.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் முறையில் மட்டுமே இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக்கட்டணம்: இந்தத் தேர்வுக்கு ரூ. 100 விண்ணப்பக் கட்டணமாக வசூலிக்கப்படும். பெண்கள், எஸ்.சி., / எஸ்.டி.,பிரிவினர் இந்தத் தேர்வுக்கு கட்டணம் செலுத்தத் தேவையில்லை.
கடைசிநாள்: இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வரும் மார்ச் 5 (5.3.2024
இணையதள முகவரி: கூடுதல் விவரங்களுக்கு www.upsc.gov.in என்ற இணையதள முகவரியைக் கிளிக் செய்து அறியலாம்.


Click it and Unblock the Notifications












