யூபிஎஸ்சியின் முதல்நிலை தேர்வுக்கு தமிழ்நாடு அரசு நடத்தும் இலவசப் பயிற்சிக்கான தகுதிதேர்வு வைத்து அதில் தேர்ந்தெடுக்கப்படுவோர்களுக்கு யூபிஎஸ்சியின் சிவில் சர்வீஸ் தேர்வு 2018 ஆம் ஆண்டிற்க்கான இலவச பயிற்சியுடன் உணவு தங்கும் விடுதி அளிக்கப்படுகிறது .

தமிழக அரசு நடத்தும் சிவில் சர்வீஸ் தேர்வுக்கான இலவச கோச்சிங் பயிற்சியில் பங்குபெற தமிழக அரசு நடத்தும் எஸ்டிஐ தேர்வை எழுத வேண்டும்.
தகுதி தேர்வில் வெற்றி பெற்றோர்க்கான அழைப்பை கடிதம் மூலம் பெறலாம். இத்தேர்வுக்கு ஆன்லைனிலேயே விண்ணப்பிக்கலாம் . எஸ்டிஐ என அழைக்கப்படும் தமிழக அரசின் இலவச பயிற்சி மையம் வழங்கும் இலவச பயிற்சிக்கு தகுதி தேர்வு எழுதி வெற்றி பெற்றோரில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் பிரிவு வாரியாக பயிற்சிக்கு அழைக்கப்படுவார்கள்.
தமிழக அரசு நடத்தும் சிவில் சர்வீஸ் இலவச பயிற்சிக்கான தகுதி தேர்வு எழுத ஆகஸ்ட் 21 இன்று முதல் விண்ணப்பிக்லாம். எஸ்டிஐ கோச்சிங் தேர்வுக்கு விண்ணப்பிக்க இறுதி தேதி செப்டம்பர் 20 ஆகும் .
தமிழ்க அரசின் இலவச பயிற்சிக்கு விண்ணப்பிக்க பிஏ, பிஎஸ்சி, பிகாம்,பிஇ, எம்பிபிஎஸ்,பிடிஎஸ், பிஎஸ்சி அக்ரி மற்றும் அங்கிகரிக்கப்பட்ட பல்கலைகழ்கத்தில் இளங்கலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்போர்க்கான குறைந்தபட்ச வயது தாழ்த்தப்ப்ட்டோர் எனில் 21 முதல் 31 வரை , சிறுபான்மையினர் எனில் 2 முதல் 35 வரை, இதர வகுப்பினர் 21 முதல் 32 வரை விண்ணப்பிக்கலாம் .
இத்தேர்வுக்கு விண்ணப்பிபோர் WWW.CIVILSERVICECOACHING.COM என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். நேரிலும் விண்ணப்பிக்கலாம், இணையதளத்தில் விண்ணப்பித்தோர் நேரில் விண்ணப்பிக்க வேண்டிய அவசியமில்லை. தேர்வானது நவம்பர் 5 ஆம் தேதி நடைபெறுகிறது . தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம்.
சார்ந்த பதிவுகள் :


Click it and Unblock the Notifications












