போட்டித்தேர்வுக்காக எவ்வளவுதான் படித்தாலும் தேர்வு பயத்தில் சில விஷயங்களை நாம் மறந்துவிடுவோம். கடைசி நேரத்தில் அவை நம் நினைவுக்கு வந்து தேவையில்லாத மனக் குழப்பத்தை ஏற்படுத்தும். அதை தவிர்ப்பது எப்படி? குறிப்பிட்ட இடைவெளியில் திரும்பத் திரும்ப படிக்கும் போது எளிதாக மனதில் பதிந்துவிடும். அந்த வகையில் போட்டித் தேர்வுகளில் பங்கு பெறும் மாணவர்களின் வசதிக்காக பொது அறிவு வினா விடைகள் கொடுக்கப்பட்டுள்ளது. படித்து பயன் பெறுங்கள்.

கேள்வி 1 : பிரம்மோஸ் ஏவுகணைக்கு அப்பெயரை சூட்டியவர் யார்?
விடை: டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம்
விளக்கம்: பிரம்மோஸ் ஏவுகணையின் முதல் வகை கடந்த 2005-ம் ஆண்டு இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டது. போர்க்கப்பலில் பொருத்தப்பட்ட இந்த ஏவுகணை பின்னர் ராணுவத்தோடு ஒருங்கிணைக்கப்பட்டது.
கேள்வி 2 : அக்கினிக் குஞ்சு என்ற நூலின் ஆசிரியர் யார்?
விடை: பாரதியார்
விளக்கம்: சின்னசாமி ஐயர் இலக்குமி அம்மாள் தம்பதியினருக்கு டிசம்பர் 11, 1882 இல் தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள (அன்றைய திருநெல்வேலி மாவட்டம்) எட்டயபுரத்தில் பாரதியார் பிறந்தார். இவரின் இயற்பெயர் சுப்பிரமணியன் என்றாலும், சுப்பையா என்று அழைக்கப்பட்டார்.
கேள்வி 3 : பல்லவர்களின் தலைநகரம் எது?
விடை: காஞ்சிபுரம்
விளக்கம்: பல்லவர் (Pallavas) என்போர் தென்னிந்தியாவில் கி.பி. 300 முதல் கி.பி. 850 வரை சுமார் ஐந்நூற்று ஐம்பது ஆண்டுகள் தமிழகத்தில் நிலைத்து ஆட்சி புரிந்தவர்கள். இவர்கள் இலங்கையை அடுத்த மணிபல்லவத் தீவிலிருந்து வந்தவர்கள்; தொண்டை மண்டலத்துப் பழங்குடிகள்.


Click it and Unblock the Notifications












