ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) சார்பில் நடத்தப்பட்ட அரசு சட்டக் கல்லூரி பேராசிரியர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வின் விடைக் குறைப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. இதன்மீது ஆட்சேபனை உள்ள தேர்வர்கள் வரும் டிசம்பர் 10ம் தேதிக்குள் தேர்வு வாரிய தகவல் மையத்தில் தெரிவிக்கலாம்.
இதுகுறித்து டிஆர்பி சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
அரசு சட்டக் கல்லூரிகளில் பேராசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்ப கடந்த அக்டோபர் 13ஆம் தேதி எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது. இந்தத் தேர்வுக்கான தற்காலிக தேர்வுக் குறிப்புகள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் www.trb.tn.nic.in என்னும் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இவற்றின் மீது ஏதேனும் ஆட்சேபனை தெரிவிக்க விரும்பும் தேர்வர்கள் வரும் டிசம்பர் 10ம் தேதி மாலை 5.45 மணிக்குள் ஆசிரியர் தேர்வு வாரிய தகவல் மையத்தில் உள்ள பெட்டியிலோ அல்லது தபால் மூலமாகவோ ஒவ்வொரு விடைக்கும் தனித்தனி படிவத்தில் உரிய ஆதாரத்துடன் அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.