டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வில் கேள்விகளுக்கு விடையளிக்க வேண்டிய பொருப்பினை உணர்ந்து விடையளிக்கவும். போட்டி தேர்வுக்கு விண்ணப்பித்தோர்கள் படிக்க வேண்டிய கேள்வி பதில்களை தொகுத்து வழங்கியுள்ளோம்.
1. இந்திய ரயில்வேயின் போக்குவரத்து மண்டலங்கள் எத்தனை?
1. 20
2. 17
3. 15
4. 4
விடை: 17
2. செபி எந்த ஆண்டு உருவாக்கப்பட்டது?
1. 2003
2. 1988
3. 2002
4. 1900
விடை: 2.1988
விளக்கம்: செபி (SEBI) என்று பரவலாக அறியப்படும் இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம் (Securities and Exchange Board of India) இந்தியாவில் பங்குச் சந்தைகள், நிதிச் சந்தைகள் ஆகியவற்றை ஒழுங்குபடுத்தும் கட்டுப்பாட்டு அமைப்பு.
3. உலகிலேயே மிகவும் பெரிய தேசியக்கொடி கொண்ட நாடு எது?
1. மால்டோவா
2. ருமேனியா
3. மால்டோவா
4. டென்மார்க்
விடை: 4. டென்மார்க்
விளக்கம்: வடக்கு ஐரோப்பாக் கண்டத்திலுள்ள டென்மார்க் நாடானது தென்மேற்கு தீவுகள், கிரீன்லாந்து ஆகிய நாடுகளை உள்ளடக்கியது. இதன் தலைநகரம் கோப்பன்ஹேகன் உலகத்திலேயே மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் 2016 ஆம் ஆண்டு டென்மார்க் முதலிடம் பிடித்தது.
4. ஃபல்மினாலாஜி என்பது ?
1. பிலிம் பற்றிய அறிவியல்
2. இடி பற்றிய அறிவியல்
3. மின்னல் பற்றிய அறிவியல்
4. புயல் காற்று பற்றிய அறிவியல்
விடை: மின்னல் பற்றிய அறிவியல்
விளக்கம்: காற்றில் உள்ள மூலக்கூறுகளுடன் மேகங்கள் உராய்வதால் ஆகாயத்தில் மின்சாரம் உண்டாகிறது. இந்த மின்சாரம் பூமியில் பாயும்போது இடிமின்னல் உண்டாகிறது. இடி, மின்னல் இரண்டும் ஒரே நேரத்தில் ஏற்பட்டாலும் மின்னல் முதலில் நம் கண்ணுக்கு தெரியும். சிறிது நேரம் கழித்து இடி சத்தம் கேட்கும். காரணம் ஒளியின் வேகம் ஒரு நொடிக்கு 3 லட்சம் கி. மீ. ஒலியின் வேகம் ஒரு நொடிக்கு 330 மீ. மட்டுமே.
சார்ந்த பதிவுகள்